ஞாபகத்திலிருந்த மழைத்தூரலில் நனைந்து
ஓவென அரற்றிப் பிறட்டியப் பெருமழையில் கரைந்தோடியது
ஒரு குடிசை.
கதவும் சிறுகுச்சிச் சன்னலும்
பக்கவாட்டில்
பத்தடியாகத் தள்ளி
மண்ணில் புதைந்திருந்தது
பாதியாக.
காலம் ஒன்றும்
சும்மா இல்லை.
சில்லென்றக் காற்றில்
உயிர் கொண்டு வந்தவொருக் குருவி
கனவைத்திறந்து பூமிக்கு உதிர்த்தது
இப்போ முளைத்திருக்கிறது.
பசுமையாய்
புதுவாடைகொண்டு.
பெரியவர்கள்
சிறியவர்கள்
நடுத்தர வயதினர்
தள்ளாத பெரியோர்
கும்பலில்
யார் பேசுவது?
எல்லோரும் பேசுகிறார்கள்.
“போன மழையிலொருக்
குடிசை அடித்துச்
சென்றது.
பள்ளிச்
சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்தனர்
பல்லில்லாத கிழவரொருவரும்
சலேஸ்வரக் கண்ணால் கண்டார்
தளிர்
மெல்லத் தலைதூக்கியது.
படபடக்கும் நெஞ்சில் கைவைத்து
பதிவான ஒரு பாடலைப் பாடியது
‘கறந்தபால் மடிபுகாது
என் மக்கா...!’
***
சின்ரெல்லா மெல்லியப் புன்னகையோடு
பிள்ளையைத் தடவிக் கொடுக்கிறாள்.
பிரஷர் குறைந்துவிட்டது.
உலகில் தனக்கென ஒரு கிளை.
ஆரவாரத்திற்கிடையில்
ஜென்மாந்திரமாகக் தொடரும் ஒரு உறவு
அந்துவிழும் இலைகளால்
அயர்ந்து ஓயப்போவதில்லை இனி.
ஆகாயத்திற்குச் சொந்தக்காரியாகிறாள்
சின்ரெல்லா.
அரியநாச்சி
7.12.2012

No comments:
Post a Comment